இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவை அடுத்து ஒரு குடியரசாக மாறுவது பற்றி அன்டிகுவா மற்றும் பார்புடாவில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதாக அந்நாட்டு பிரதமர் கஸ்டோன் பிரவுன் தெரிவித்துள்ளார்.

இந்த சர்வஜன வாக்கெடுப்பு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நடத்தப்படும் என்றும் இது ஒரு விரோதச் செயல் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார். மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் நாட்டின் அரச தலைவர் என்பதை உறுதி செய்யும் அறிவிப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எனினும் அடுத்து நான்கு ஆண்டுகளுக்குள் இவ்வாறான வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படமாட்டாது என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அன்டிகுவா மற்றும் பார்புடா 1981இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றபோதும் பொதுநலவாயத்தில் இருக்கும் 15 நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நாடுகள் பிரிட்டனின் மன்னரை தங்கள் அரச தலைவராக பகிர்ந்துகொள்கின்றன.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh