Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இங்கிலாந்து ராணியின் மறைவை தொடர்ந்து இடம்பெறவுள்ள அதிரடி மாற்றங்கள்...!

 


இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து புதிய மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு தேசிய கீதம், நாணயம், கடவுச்சீட்டு உள்ளிட்டவை மாற்றியமைக்கப்பட உள்ளன.

கடந்த 1952ஆம் ஆண்டில் இங்கிலாந்து ராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்ற நாளில் இருந்து பிரிட்டனின் தேசிய கீதத்தில் ‘‘காட் சேவ் தி குயின்’’ என்ற வரிகள் பாடப்பட்ட நிலையில், தற்போது சார்லஸ் மன்னராக இருப்பதால் ‘‘காட் சேவ் தி கிங்’’ என்று தேசிய கீதம் மாற்றப்படுகிறது.

இதேபோல் இங்கிலாந்தின் நாணயம், கடவுச்சீட்டு, அஞ்சல் தலை உள்ளிட்டவற்றிலும் மன்னர் சார்லஸை முன்னிறுத்தி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments