Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக குறைகிறது...!

 


வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்த நூறு கொள்கலன்களில் கோதுமை மா துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் இரண்டு வாரங்களுக்குள் அதனை தட்டுப்பாடின்றி கிலோ 250 ரூபா என்ற குறைந்த விலையில் சந்தைக்குப் பெற்று கொடுக்க முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (03) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரோஹண பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நிறுவனங்கள் மாத்திரமே 99 சத வீதமான கோதுமை மாவை உற்பத்தி செய்கின்றன. அதேவேளை, இந்தியாவிலிருந்தே நூற்றுக்கு 90 வீதமான கோதுமை மா நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. எனினும் தற்போது இந்திய அரசாங்கம் கோதுமை மா இறக்குமதிக்கு தடை விதித்துள்ளதால் நாம் துபாய் மற்றும் துருக்கி நாடுகளில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்காக சில காலம் எடுத்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் பொதி செய்து அதிக விலையில் கோதுமை மா விற்பனை செய்யப்படுவது தொடர்பில் வர்த்தக அமைச்சினால் எதுவும் செய்ய முடியாது. கோதுமை மாவுக்கு கட்டுப்பாடு விலையும் இல்லை என்றார்.

Post a Comment

0 Comments