Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஆந்திராவில் 3-வது நாளாக நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி...!

 

ஆந்திராவின் கர்னூல் பகுதியில் இருந்து இன்றைய நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி.

நாட்டின் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தன்னைப் புதுப்பித்துக்கொள்வதில் முனைப்பாக உள்ளது. அந்த வகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் 'பாரத் ஜோடோ யாத்திரை' (இந்திய ஒற்றுமை பாதயாத்திரை) என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். 

கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதியன்று, தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இந்த பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். தமிழ்நாடு, கேரள, கர்நாடக மாநிலங்களில் யாத்திரையை முடித்து விட்டு ஆந்திர மாநிலத்தில், அலுரு தொகுதியில் உள்ள ஹலாகார்வியில் பாத யாத்திரையைத் தொடங்கினார். 21-ந் தேதிவரை அவர் ஆந்திராவில் யாத்திரையை நடத்துகிறார். இந்த யாத்திரையில் அவர் 119 கி.மீ. தொலைவை கடக்கிறார். 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்போது ஆந்திராவில் தேசிய ஒற்றுமை பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை கர்னூல் மாவட்டம் ஆதோனியை நேற்று வந்தடைந்தது. இந்தநிலையில் ஆந்திராவின் கர்னூல் பகுதியில் இருந்து இன்றைய நடைபயணத்தை ராகுல்காந்தி தொடங்கினார். வழி நெடுகிலும் காங்கிரஸ் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments