Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பிரான்ஸில் நாடு கடத்தப்பட்ட 7 இலங்கைத் தமிழர்கள்...!

  

பிரான்ஸின் ரீயூனியன் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் தமிழர்கள் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த 7 பேரின் தடுத்து வைக்கப்படும் காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கடந்த வாரம் மானம் ஒன்றின் மூலம் அவர்கள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 17ஆம் திகதி படகு மூலம் பிரான்ஸிற்கு வந்த 46 இலங்கையர்களில் 7 பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

39 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு பின்னர் வெளியேற அனுமதி வழங்கப்பட்டது.

தடுப்பு காவலின் பின்னர் அவர்களை புகலிடம் கோருவதற்கு விண்ணப்பிப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், தடுப்பு காவலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

எனினும் சிறிய தவறு காரணமாக இவர்களில் 7 பேரின் கோரிக்கை மீளப்பெறப்பட்டுள்ளது. அவர்களின் வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர். எனினும் மொழி பெயர்ப்பு சிக்கலால் அவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

தமிழர்களான ஏழு பேரும் மீண்டும் நிர்வாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போதிலும் நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்தது. இதன் காரணமாக அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை திருப்பி அனுப்பும் வரை விமான நிலையம் ஒன்றில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். குறித்த இலங்கை குழு பிரான்ஸிற்குள் எவ்வாறு வந்தனர் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மனித கடத்தலில் ஈடுபடும் குழுவொன்றின் அனுரனையில் இவர்கள் பிரான்ஸிற்குள் வந்தார்கள் என்பது தொடர்பில் கண்டறியப்படவுள்ளதுடன் அவர்களின் அடையாளங்களையும் பகிரங்கபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments