Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

எரிவாயு வளத்தை பகிர்வதற்கு இஸ்ரேல் - லெபனான் ஒப்பந்தம்...!


இஸ்ரேல் மற்றும் லெபனான் தனது மத்தியதரைக் கடல் எல்லைகளை நிர்ணயிக்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டது தொடக்கம் இந்த இரு தரப்பும் போர் சூழலில் இருந்து வரும் நிலையில் எரிவாயு தளம் ஒன்றின் உரிமைக்காக பிரச்சினைப்பட்டு வந்தன.

உடன்படிக்கை ஒன்றுக்கு முன்னர் எரிவாயு எடுத்தால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று லெபனானின் சக்திவாய்ந்த ஆயுத மற்றும் அரசியல் குழுவான ஹிஸ்புல்லா எச்சரித்து வந்தது.

இந்நிலையில் எரிவாயு தளத்தில் இருந்து இரு நாடுகளும் பொருளாதார ரீதியில் பலன் பெறவுள்ளன.

இந்த உடன்படிக்கையில் 330 சதுர மைல் கடல் பகுதி உள்ளடக்கப்பட்டுள்ளது. எல்லைகள் பிரிப்பதில் இருந்த முரண்பாடு காரணமாக இந்த பகுதியில் உள்ள இயற்கை வளங்களை இரு நாடுகளும் பெற முடியுமாக ஒப்பந்தம் அமைந்துள்ளது.

எரிவாயு இருப்பது உறுதி செய்யப்பட்ட கரிஷ் பகுதியை இஸ்ரேலுக்கும் குவானா பகுதியை லெபனானுக்கும் வழங்க அமெரிக்காவின் மத்தியஸ்தத்திலான உடன்படிக்கையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments