Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பிரித்தானியாவில் மக்கள் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்…!

 

பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால், மக்கள் கடும் நெருக்கடியான நிலைமைக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கூடுதல் வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.

5.2 மில்லியன் தொழிலாளர்கள் வாழ்க்கைச் செலவை அதிகரிப்பதற்கு உதவுவதற்காக இரண்டாவது அல்லது பல வேலைகளுக்குத் திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

லண்டனை தளமாக கொண்ட காப்பீட்டு நிறுவனமான ரோயல் லண்டன் வெளியிட்ட ஆய்வு அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்விற்கமைய, மேலும் 10 மில்லியன் பேர் மேலதிக தொழிலுக்கு செல்வதற்காக திட்டமிட்டு வருவதமாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிக்க பாரிய அளவிலான மக்கள் மிக நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள் என ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக 4,000 பிரித்தானிய வயது வந்தவர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பிற்கமைய, இது தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளது.

வாழ்க்கைச் செலவு 40 ஆண்டுகளில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இது உணவு மற்றும் எரிசக்தியின் விலை உயர்வால் இயக்கப்படுகிறது. உயரும் செலவுகள் வரவு செலவுத் திட்டங்களில் விழுகின்றன, விலை உயர்வு ஊதியத்தை விட அதிகமாக உள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையே இடம்பெற்று வரும் போர் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக பிரித்தானிய மக்கள் பணவீக்கம் மற்றும் எரிசக்தி கட்டண உயர்வினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் இரண்டு வேலைகள் அல்லது அதற்கு மேற்பட்ட வேலைகளை செய்வதற்கு அல்லது நீண்ட வேலைகளை செய்து அதிகம் சம்பாதித்தால் மாத்திரமே குடும்பத்தினை நடத்தி செல்ல முடியும் என்ற நிலைப்பாட்டிற்கு மக்கள் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


Post a Comment

0 Comments