Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பிரான்ஸில் பொது மக்களுக்கு விசேட கட்டுப்பாடு...!

பிரான்ஸில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சில மருந்துகளை பார்மஸிகளில் பெற்றுக்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Doliprane மற்றும் Efferalgan உட்பட ஒரு நோயாளிக்கு இரண்டு பெட்டிகள் பாராசிட்டமோல் மாத்திரைகள் மாத்திரமே விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு பொது மருத்துவர் பரிந்துரை இல்லாமல் நோயாளிகளுக்கு இரண்டு பெட்டிகள் மட்டுமே இந்த மாத்திரைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களின் பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம் இந்தப் பரிந்துரை வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் பிரபலமான இந்த மருந்துகள் மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன.

குளிர்காலம் நெருங்கி வருவதாலும், கொரோனா தொற்றுநோய் மீண்டும் தொடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாராசிட்டமால் பயன்படுத்துமாறு நோயாளிகளுக்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.



நோய் அறிகுறிகள் தெரிந்தால், நாள் ஒன்றுக்கு மூன்று முறை என்ற கணக்கில் 8 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை இவ்வாறு பாராசிட்டமால் மாத்திரைகளை உட்கொள்ளுமாறு பொது மக்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நோயாளிகள் உடனடி தேவைக்காக மாத்திரம் பாராசிட்டமால் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதனை தவிர்த்து தேவையற்ற முறையில் அதைச் சேமித்து வைக்க வேண்டாம் எனவும் மருந்துச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட குறைவான அளவு பாராசிட்டமால் வழங்கலாம் எனவும் மருந்தகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments