Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மருதமுனை ஜமியத்துல் உலமா சபையின் தலைவர் போதை ஒழிப்பு தொடர்பில் சிறப்பு உரை...!



வலுவூட்டலால் நாட்டை வெல்ல போதை அரக்கனிலிருந்து நீங்கள் மீளுங்கள்" எனும் கருப்பொருளில் நேற்று10ஆம் திகதி மாலை 04.30 மணியளவில் மருதமுனை கடற்கரை லைட் ஹவுஸ் திறந்த வெளியில்க ல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவு மற்றும் மருதமுனை சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி. அன்வர் அவர்கள் இணைப்பாக்கத்தில்கல்முனை பிரதேச செயலாளர் அஷ்-செய்க் ரி.எம். முஹம்மட் அன்சார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதான உரையை மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்-செய்க் எப்.எம்.எஸ்.ஏ. அன்சார் மௌலானா (நளிமி) விசேட உரை நிகழ்த்தினார்.

இதில் மருதமுனை பாடசாலை மாணவர்களினால் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு நாடகம், கவியரங்கு, வில்லுப்பாட்டு மற்றும் பேச்சு என பல நிகழ்வுகள் அரங்கேறின.

விஷேட நாடகமாக வசந்தம் TV இல் ஒளிப்பராப்பான "வாங்க பழகலாம்" குழுவின் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு நாடகமும் அரங்கேறியது டன் புகைத்தல் எதிர்ப்பு தின கொடியும் அதிதிகளுக்கு அணிவிக்கப்பட்டதுடன் "சிப்தர" புலமை பரிசில் பெறும் சில மாணவர்களுக்கு மேடையில் வைத்து பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

Post a Comment

0 Comments