குருநாகல் அலகொளதெனிய அந்நூர் குர்ஆன் பயிற்சி மத்ரசா மாணவர்களின் ரமலான் சிறுவர் வேடிக்கை மற்றும் கைவினை நிகழ்வு 2026 மிகக் கோலாகலமாக அலக்கொலதெனியவில் உள்ள அந் நூர்குர்ஆன் பயிற்சி மத்ரஸாவில் எதிர் வரும் வியாழக் கிழமை பகல் 1மணிக்கு நடை பெற உள்ளது.
அந் நூர் குர்ஆன் பயிற்சி மத்ரசாவின் ஸ்தாபகர் பாத்திமா சவ்மினா முஅல்லிமா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாக சமூக ஆர்வலர் மல்லவபிட்டி அல் ஜாமீயுல் அக்பர் ஜும்மாப்பள்ளிவாசலின் நிர்வாக சபை உப தலைவர் அல் ஹாஜ் A.R.M.பாரிஸ் அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.
கடந்த காலங்களில் குர் ஆன் மத்ரசாவில் நடைபெற்ற இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சியில் வெற்றி ஈட்டிய மாணவமாணவிகளுக்கும் சான்றிதழ்களும் பரிசில்களும் இந் நிகழ்வில் வழங்கி கொளரவிக்க பட உள்ளன.

.png)

0 Comments